வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் 129வது பிறந்தநாள் நிகழ்வு மற்றும் ஆண்டுவிழா நேற்று (14.02.2017) செவ்வாய்க்கிழமை பாடசாலையின் 2013ம் வருட உயர்தர பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் சிரேஸ்ட மாணவத்தலைவன் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா தெற்கு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர் திரு.சிவநாதன், முன்னாள் அதிபர் சு.அமிர்தலிங்கம், நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது 129வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், வாழ்த்துப்பா இசைத்தல் உள்ளிட்ட பல நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.