மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!!

672


கொழும்பு – பதுளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



பலாங்கொடையிலிருந்து பெல்மடுல வரை பயணித்த பேருந்து ஒன்று எதிர் திசையில் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டதினாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

அத்துடன், சம்பவத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.