பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்து கிடந்த எலி!!

388

புது டெல்லியில் உள்ள அரசாங்கப் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் எலி இறந்து கிடந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று (16.02) பரிமாறப்பட்ட மதிய உணவை உட்கொண்ட மாணவர்கள் 9 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விடயம் தொடர்பில் டெல்லி அரசு புலனாய்வு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எலி இறந்து கிடந்த உணவு தியோலி பகுதியில் உள்ள அரசாங்கப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.