வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற “வெற்றிக்கு வழிகாட்டி” நூல் வெளியீட்டு விழா!!

244


 
வவுனியா கோவில்குளத்தைச் சேர்ந்த கி.சங்கர் தொகுத்து எழுதிய “வெற்றிக்கு வழிகாட்டி” எனும் பொது அறிவு சார்ந்த நூல் வெளியீட்டு விழா வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் கல்லூரி முதல்வர் ரி.பூலோகசிங்கம் தலைமையில் இன்று (17.02.2017) வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

நூல் வெளியீட்டு விழாவின் பிரதம அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



சிறப்பு அதிதிகளாக கோவிக்குளம் இந்துக் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் கலாபூசணம் க.சிவஞானம் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் சி.வையாபுரிநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

கௌரவ அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்) கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.