பறக்கும் டாக்ஸியை அறிமுகப்படுத்துகிறது துபாய்!!

263


 
துபாயில் பறக்கும் டாக்ஸி (Taxi) சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. துபாயில் உலக நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாட்டினரும் பங்கேற்றுள்ளனர்.

இதில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் டாக்ஸி சேவையாக, ஒருவர் மட்டும் பயணிக்கும் வகையிலான பறக்கும் கார் என்றழைக்கப்படும் தானியங்கி பறக்கும் வாகனம் பார்வைக்கு வைக்கப்பட்டது.



எதிர்வரும் ஜூலை மாதம் குட்டி விமானம் போன்று காணப்படும் இந்த வாகனம் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”ஹோவர் டாக்ஸி” என்று குறிப்பிடப்படும் இந்த பறக்கும் வாகனம் அதிகபட்சம் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் வாய்ந்தது. தரையிலிருந்து 300 மீட்டர் உயரத்தில் பறந்து செல்லும்.



தரைக்கட்டுப்பாட்டு மையம் மூலமாக, பறக்கும் காரின் வழித்தடம், வேகம், இறங்கும் இடம் உள்ளிட்டவை கண்காணிக்கப்படும்.



இதன் நீளம் 12 அடி, அகலம் 14 அடி, உயரம் 5.2 ஆகும். இது நவீன தொழில்நுட்பத்தில் தானாக இயங்கும். பயணி இதில் அமர்ந்து எதிரே இருக்கும் தொடு திரையில் செல்ல வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டால் அங்கே தரையிறக்கி விடும்.


தொடர்ந்து 30 நிமிடம் பறக்கும் இந்த வாகனம் அதிகபட்சமாக 2 மணிநேரம் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.