அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரின் உறவினர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து கை துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பில் போக்குவரத்து வசதிகளை சந்தேகநபர் செய்துகொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி தாய், தந்தை மற்றும் சிறு குழந்தை ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அம்பலாங்கொடையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.