நாய்களை சண்டை போடவைத்து வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்!!

349

நாய்களை ஒன்றை ஒன்று சண்டை போடவைத்து நடக்கும் வினோத விளையாட்டுப் போட்டி ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் உள்ள பாக்மனில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் நாய் சண்டை போட்டி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு நாய் உரிமையாளர்கள் ஒரு காலி இடத்தில் நிறுத்தப்பட்டு, அதன் பின் அவர்களின் வளர்ப்பு நாய்களை ஒன்றை ஒன்று மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

இதில் நாய்கள் இறுதி வரை மோதவேண்டும் என்று கட்டாயம் இல்லை, மோதலின் போது எதிர் நாய்க்கு பயந்து விட்டு ஓடினாலே போதும் என்று கூறப்படுகிறது.

இந்த வினோத போட்டி நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த காலக்கட்டங்கள் குளிர் காலங்கள் என்பதால் நாய்களுக்கு காயம் ஏற்பட்டாலும், அந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படாது என்பதால் குறித்த மாதங்களில் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.