தன்னுடைய சட்டையை தானே கிழித்துக் கொண்டாரா ஸ்டாலின்?

335

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றியடைந்துள்ளது. சட்டசபை கூட்டம் தொடங்கியவுடன் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரியும், ஒருவாரம் கழித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர் திமுக எம்எல்ஏ-க்கள்.

இதனை சபாநாயகர் தனபால் மறுத்ததால் ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏ-க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சபாநாயகரின் உத்தரவின்படி ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏ-க்களை கூண்டாக வெளியேற்றினர்.

அப்போது ஸ்டாலின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சட்டையை கிழித்து அவமானப்படுத்தியதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

ஆனால் அவர் சட்டசபையில் இருந்து வெளியே வந்த போது சட்டை பையில் பேனா இருந்துள்ளது, அடுத்த படத்தில் சட்டை பை கிழிந்துள்ளது.

யார் இவரது சட்டையை கிழித்திருப்பார்கள் அல்லது இவரே கிழித்துக் கொண்டு அதிமுக மீது குற்றம் சுமத்துகிறாரா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.