பாடசாலையில் மாணவர்களால் கூட்டாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை!!

244

அவுஸ்திரேலியாவில் பாடசாலையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதிய கடிதத்தை அவர் தாய் சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அவுஸ்திரேலியா நாட்டில் வசித்து வருபவர் Linda, இவரின் மகள் பெயர் Cassidy Trevan (13). இவர் அங்குள்ள பாடசாலையில் படித்து வந்தார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் Cassidy பாடசாலையில் இருக்கும் போது அவருடன் படிக்கும் சில மாணவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அந்த மாணவர்கள் Cassidyவை அடித்து துன்புறுத்தும் செயலிலும் ஈடுப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வீட்டுக்கு வந்த Cassidy தற்கொலை செய்ய முடிவெடுத்து அதற்கு முன்னர் ஒரு கடிதம் எழுதினார். அதில், என் பெயர் Cassidy Trevan, நான் என்னுடன் படிக்கும் மாணவர்களாலேயே அடித்து துன்புறுத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டேன்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை எச்சரிக்கை செய்யவே இந்த கடிதம். எனக்கு இன்று நடந்தது நாளை மற்றவர்களுக்கும் நடக்கலாம். இப்படி உங்களுக்கு நடந்தால் தைரியாக எதிர்த்து போராடுங்கள் என எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை Cassidyவின் தாய் Linda மன தைரியத்தை வரவழைத்து கொண்டு மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க சமூகவலைதளங்களில் அதை பகிர்ந்துள்ளார்.