வவுனியா பொதுப் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!!

303

 
வவுனியா நகரசபை பொதுப் பூங்காவில் நேற்று (18.02.2017) மாலை சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கீழே விழுந்து சிறுவன் ஒருவர் படுகாயமடைந்து பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இன்று (19.02.2017) காலை பொதுப் பூங்காவிற்குச் சென்ற வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் உடைந்து விழுந்த ஊஞ்சலினைப் பார்வையிட்டதுடன் பூங்கா ஒப்பந்த உரிமையாளர்களையும் அழைத்து கலந்துரையாடியதுடன் அங்குள்ள அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் மறு பரிசீலனை மேற்கொள்ளுமாறும் அதுவரையில் நகரசபை பொதுப் பூங்காவினைத் தற்காலிகமாக மூடிவிடுமாறும் தெரிவித்துள்ளதுடன் நகரசபை செயலாளருடனும் தொலைபேசியில் உரையாடி நகரசபை செயலாளரின் அனுமதியுடன் பொதுப் பூங்கா இன்று முதல் மறு அறிவித்தல் வரும்வவரை திருத்தவேலைகள் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்தி : வவுனியா நகரசபை பூங்காவில் ஊஞ்சல் ஆடிய சிறுவனுக்கு நேர்ந்த கதி!!