ஆறு இலங்கையர்களுக்கு குவைத்தில் மரண தண்டனை!!

247


குவைத்தில் ஆறு இலங்­கை­யர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக குவைத்­திற்­கான இலங்கைத் தூதுவர் நந்­தீபன் பால­சுப்­ர­ம­ணியம் தெரி­வித்­துள்ளார்.இவ்­வாறு மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட ஆறு­பேரும் போதைப்­பொருள் மற்றும் கொலைக் குற்­றச்­சாட்­டு­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் என்றும் அவர் தெரி­வித்தார்.



கொலைக்­குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள், கொலை செய்­யப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் நஷ்­ட­ஈட்டைப் பெற்­றுக் ­கொள்­வ­தற்கு சம்­ம­தித்தால் மர­ண­தண்­ட­னை­யி­லி­ருந்து விடு­பட முடியும். ஆனால் போதைப்­பொருள் குற்­றச்­சாட்­டின்­பேரில் மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அவ்­வாறு மரண தண்­ட­னை­யி­லி­ருந்து விலக்­க­ளிக்க முடி­யாது.

இதற்கு முன்னர் இலங்­கையைச் சேர்ந்த ஒருவர் கொலைக் குற்­றத்­திற்­காக மர­ண­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டார். அவர் இலங்கை தூத­ர­கத்தின் உத­வி­யுடன் நட்ட ஈட்டை வழங்கி தண்­ட­னை­யி­லி­ருந்து விடு­பட்டார்.



எவ்­வா­றெ­னினும் குவைத் அர­சாங்கம் 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை தற்­கா­லி­க­மாக மர­ண­தண்­ட­னையை நிறுத்­தி­வைத்­தி­ருந்­தது. ஆனால் இந்த வருடம் தொடக்கம் மீண்டும் மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்றி வரு­கி­றது. அந்த வகையில் இந்த வரு­டத்தில் குவைத் அரச குடும்­பத்தில் ஏழுபேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றும் தூதுவர் சுட்டிக்காட்டினார். சிங்கள வாரநாளேடொன்று இச் செய்தியை வெளியிட்டுள்ளது