மனைவியை பார்த்த நபரை பொதுஇடத்தில் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளிய கணவர்!!(வீடியோ)

287


மெக்சிகோவில் கணவர் ஒருவர் தன் மனைவியை ஏன் பார்க்கிறாய் என்று கூறி, அருகில் இருந்த நபரை அந்த இடத்திலே சுட்டுத்தள்ளிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மெக்சிகோவில் மர்ப நபர் ஒருவர், திடீரென்று தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தன் அருகில் பேசிக்கொண்டிருந்த நபரை சுட்டுத்தள்ளிவிட்டு சாதரணமாக நடந்து சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ அந்நாட்டு ஊடகங்களில் செய்தியாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இச்சம்பவம் மெக்சிகோவின் Chimalhuacán பகுதியில் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் காபி நிறத்தில் டீ-சர்ட் அணிந்த நபருக்கும், அவர் அருகே இருந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



அப்போது டீ சர்ட் அணிந்த நபர், மனைவி ஒருவர் அருகில் இருக்கும் போது ஏன் மற்றவரின் மனைவியை பார்க்கிறாய் என்று கேட்டுக்கொண்டே தன் பையில் இருந்த துப்பாக்கியை எடுக்கிறார்.



இதற்கு அந்த நபரோ துப்பாக்கியை எடுத்தால் தான் பயந்துவிடுவேனா, தனக்கு எந்த ஒரு பயமும் இல்லை என்று கூறியுள்ளார். அப்போது திடீரென்று அந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அப்பகுதியை விட்டு வெளியேறுகிறார்.


இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானதால், தற்போது இது மிகவும் வைரலாக பரவி வருகிறது. மேலும் தாக்குதல் நடத்திய நபர் அடையாளம் காணப்படவில்லை என்றும், தாக்குதலுக்கு உள்ளான நபரின் நிலைமையும் என்ன ஆனது என்பது குறித்து சரியான தகவல் வெளிவரவில்லை என்று அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.