வவுனியா பாடசாலைகளில் கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் கவனயீர்ப்பு!!

361


 
வவுனியாவில் இன்று (20.02.2017) காலை 8 மணி தொடக்கம் 9 மணிவரை கோவிற்குளம் இந்துக்கல்லூரி, தாண்டிக்குளம் பிறமண்டு வித்தியலாயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியலாயம், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயம் போன்ற பாடசாலைகளின் மாணவர்கள் கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்து தமது பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.