30 வரு­டங்­க­ளாக தினமும் செல்பீ படம்­பி­டித்த மனிதர்!!

411

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 30 வரு­டங்­க­ளாக செல்பீ படம்­பி­டித்து வந்­துள்ளார்.

கார்ல் பெடேன் எனும் இவர், செல்பீ எனும் வார்த்தை பயன்பாட்டுக்கு வரு­வ­தற்கு வெகு காலத்­துக்கு முன்­னரே தன்னைத் தானே படம்­பி­டிக்க ஆரம்­பித்­தாராம்.

போஸ்டன் கல்­லூ­ரியில் பேரா­சி­ரி­யாகப் பணி­யாற்றும் இவர், 1987 ஆம் ஆண்­டி­லி­ருந்து தினமும் ஒரு செல்பீ பட­மா­வது பிடித்­துக்­கொண்­டாராம்.

பல்­வேறு இடங்­களில் ஏறத்­தாழ ஒரே பின்­னணி. ஒளி­ய­மைப்­புடன் இவர் செல்பீ படம் பிடித்து வந்தார். இது­வரை சுமார் 11,000 செல்பீ படங்­களைப் பிடித்­துக் ­கொண்­டுள்ளார்.

தனது இத்­திட்­டத்­துக்கு எவ்­ரிடே செல்பீ ப்ரஜெக்ட் என இவர் பெய­ரிட்­டுள்ளார்.

நேற்­றுடன் இந்த செல்பீ திட்­டத்­துக்கு 30 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின. இனியும் இந்நடவடிக்கையை தொடரவுள்ளதாக கார்ல் பெடேன் கூறுகிறார்.