நடிகை பாவனா யாரையோ காதலிக்கிறார் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று மட்டும் செய்திகள் வந்தன. இந்நிலையில் திடீரென நடிகை பாவனா, கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
இதுகுறித்து பாவனா பேசும்போது, என் அப்பா இறந்துவிட்டதால் தான் என்னுடைய திருமணம் தள்ளிப்போனது. நவீன் மற்றும் அவரது குடும்பத்தார் அவர்களுடைய சம்பிரதாயத்திற்காக மணப்பெண்ணை பார்க்க வந்தனர்.எல்லோரும் கூடியிருக்கிறோம் இப்போதே நிச்சயதார்த்தம் செய்துவிடலாம் என அனைவரும் விரும்பியதால் தான் உடனே நடந்தது. என்னுடைய நண்பர்களை கூட நான் அழைக்கவில்லை என்றார்.அதோடு பாவனாவின் திருமணம் ஓகஸ்டில் நடக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன.