வவுனியா செட்டிகுளம் பிரதேச இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்!!

560

 
செட்டிகுளம் பிரதேச இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று (12.03.2017) காலை 10 மணியளவில் செட்டிகுளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

புதிதாக நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இப் பொதுக்கூட்டத்திற்கு வவுனியா மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான அபேயசிங்க, சுகானி, முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சங்கரன், சசிகுமார், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கேசவன், இளைஞர் சேவை அதிகாரிகளான சசிகரன், ரதித்திரா, மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவர் கிரிதரன், இளைஞர் கழக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.