செல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படியுங்கள்!!

466

இன்றைய தலைமுறையினரில் ஸ்மார்ட்போன் உபயோகிக்காதவர்கள் மிக குறைவு. ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் செல்பி எடுக்காதவர்களே இல்லை.

தொடர்ந்து அடிக்கடி செல்பி எடுப்பவர்களுக்கு முக சுருக்கம் ஏற்பட்டு விரைவில் வயதானோர் போல மாறிவிட வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தினை சேர்ந்த மருத்துவர் சைமன் ஜோகாய், தற்போது செல்பி எடுப்பவர்கள் அதிகம். அடிக்கடி செல்பி எடுக்கும் போது போனில் உள்ள நீல நிற ஒளியானது தோலை பாதிக்கும் தன்மை உடையது.

மொபைல் போனில் இருந்து வெளிவரும் எலக்ரோ மேக்னடிக் கதிர்கள் டி.என்.ஏ வை பாதிப்பதால், நாளடைவில் தோல் சுருக்கம் ஏற்பட்டு விரைவில் வயதானோர் போல் காட்சியளிப்பர்.

இதற்கு முகத்தினை பாதுகாப்பாக வைப்பதற்கு ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். ஆனால், நாம் உபயோகப்படுத்தும் சன்ஸ்கீரீன்கள் முகத்திற்கு பாதுகாப்பை தராது எனக் கூறியுள்ளார்.