வவுனியாவில் சைட்டம் (SAITM) பற்றிய திறந்த கலந்துரையாடல்!!

463


 
சைட்டம் – மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பற்றியும் அதுசார்ந்த சமகாலப் பிரச்சினைகள் பற்றியும் ஒரு திறந்த கலந்துரையாடல், வவுனியா வைத்தியர்களின் ஒன்றிணைவில் இடம்பெற்றது.

நண்பர்கள் அமையத்தின் ஏற்பாட்டில் இன்று (19.03.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் முத்தையா மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சைட்டம் பற்றிய கேள்விகள், சந்தேகங்கள் அனைத்தையும் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.



இக் கருத்தரங்கு செ.மதுரகன் ( ஒமந்தை ஆரம்ப மருத்துவமனையின் சிரேஸ்ட வைத்தியதிகாரி) நெறியாள்கையின் கீழ் இடம்பெற்றதுடன், இந் நிகழ்வில் சி.துசாரகன் (வைத்தியஅதிகாரி), திரு.சுதாகரன் ( சிரேஸ்ட வைத்தியதிகாரி – வவுனியா) , போல் பிரைட் பெனடிக் ( முன்னாள் மருத்துவ பீட மாணவத்தலைவர்) , பல்கலைக்கழக மாணவர்கள் , பொதுமக்கள், அரச மற்றும் அரசார்ப்பற்ற உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.