தமிழகத்தில் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு பேராடிய மாணவர்களை சிறுவன் ஒருவன் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
திண்டுக்கல், பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 12 வயதான மைதிலிநாதன், குகன், லோகேஷ்குமார் ஆகியோர் 7ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
சம்பவத்தின் போது, மூவரும் கிணற்றில் ஆமை பிடிக்க சென்றுள்ளனர். அப்போது, குகனும், லோகேஷ்குமாரும் சரிந்து கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்துள்ளனர்.
உடனே மைதிலிநாதன் இருவரின் கைகளை பிடித்து மேலே துாக்கியுள்ளார். பின்னர், மைதிலிநாதன் கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
இந்நிலையில், அலறல் சத்தம் கேட்டு விரைந்த இளைஞர்கள் மைதிலிநாதனை காப்பற்றியுள்ளனர். இதில் மைதிலிநாதனுக்கு கை முறிவும், இடுப்பில் காயமும் ஏற்பட்டுள்ளது.
தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மைதிலிநாதனை பொது மக்களும், பொலிசாரும் பாராட்டியுள்ளனர்.