பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!!

404

நடுவானில் பறவை மோதியதால், நிலை தடுமாறிய விமானம் விபத்திலிருந்து தப்புவதற்காக அவசரமாக தரை இறக்கப்பட்ட சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், அகமதாபாத்திலிருந்து அமெரிக்கா பயணித்துள்ள நிலையில், நடுவானில் பறவை மோதியதால், அவசரமாக லண்டன் ஹத்ரோவ் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

மேலும் குறித்த விமானமானது 230 பயணிகளுடன் லண்டன் வழியாகச் பயணித்துள்ள நிலையில், நடுவானில் விமானத்தின் முன்பகுதியில் பறவை தாக்கியதால், விமானத்தின் ராடார் செயலிழக்கவே, விமானம் விபத்துக்கள் எதுவுமின்றி பாதுகாப்பாக லண்டன் ஹத்ரோவ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.