பெற்ற தாயை கொலை செய்த மகன் : உணவு கொடுக்க தாமதமாகியதால் ஏற்பட்ட விபரீதம்!!

249

வெலிகம – படவல பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தாயை தடியொன்றினால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 75 வயதுடைய வயோதிப தாயொருவரே உயிரிழந்துள்ளார். குறித்த தாயின் மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும், நீண்டகாலமாக சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், காலை உணவு தர தாமதமான காரணத்தினால் கோபமடைந்த மகன் தனது தாயை தடியொன்றினால் தாக்கியுள்ளதாகவும் வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளார்.