வவுனியாவில் மாடு கடத்திய ஒருவர் கைது!!

500

வவுனியா – செட்டிக்குளத்தில் கடந்த 28 திகதி பட்டியில் கட்டி விடப்பட்ட மாட்டை காணவில்லை என செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் பெயரில் விசாரணைகளை மேற்கொண்ட செட்டிக்குளம் பொலிஸார் நேற்று முன்தினம்(25.03) 39வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர், குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.