பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு பாலியல் தொல்லை!!

305

பிரபல வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் மனைவி இரு வருடங்களுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் ஷகிப் அல் ஹசன் (30) இவர் மனைவி உம்மி அகமது (27), இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மிர்பூர் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் விளையாடியது.

அப்போது தனது கணவர் விளையாடுவதை உம்மி கலரியில் உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது அருகிலிருந்த ஒரு நபர் உம்மிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் இது குறித்து அவர் தனது கணவரிடம் கூற ஷகிப் பொலிசில் புகார் செய்துள்ளார்.

அதன்பின்னர் பொலிசார் ரஹித் (23) என்னும் இளைஞரை இது சம்மந்தமாக கைது செய்தனர். இந்த விடயம் தற்போது தான் வெளியில் தெரியவந்துள்ளது.