க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும்!!

658

2016ம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை 28ம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அன்றைய தினத்தில் பரீட்சார்த்திகள், இணையத்தின் மூலம் தங்களது பெறுபேறுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, 5,669 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், சுமார் 7 லட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இதேவேளை, 2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 21ம் திகதி முடிவடையவுள்ளது.

இவ்வாண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 02ம் திகதி முடிவடையும்.

இதேவேளை, இவ்வாண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ம் திகதி நடைபெறவுள்ளது என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.