வவுனியா மாவட்ட செயலகம், பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!

307

 
அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10 இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான சுயசக்தி கடன் விண்ணப்பத்தை கையளிப்பதற்காக வவுனியா மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் மக்கள் காலை முதல் முண்டியடித்துக் கொண்டு நிற்பதை காணமுடிகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் ஊடாக நாடு முழுவதும் 10 இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்குடன் சுயசக்தி என்னும் பெயரில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இளைஞர், யுவதிகளின் தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் வரை குறைந்த வட்டி வீதத்தில் வங்கிகள் மூலம் அவர்களது தொழில் தகமை மற்றும் தொழில் நடவடிக்கைக்கு ஏற்ப கடன் வழங்க குறித்த அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி இதற்கு விண்ணப்பிப்பதற்காக இளைஞர்கள், யுவதிகள், தாய்மார், முதியவர்கள் எனப் பலரும் மாவட்ட செயலகத்தில் உள்ள அலுவலகத்திலும், வவுனியா பிரதேச செயலகத்திலும் விண்ணப்பங்களை பெறுவதற்கும் அதனை சமர்ப்பிப்பதற்கும் முண்டியடித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக விண்ணப்பங்களைப் பெறும் மற்றும் வழங்கும் நடவடிக்கைகளில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை வவுனியா மாவட்டத்தில் ஐந்தாயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் வரை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.