வவுனியாவில் அரச ஊழியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!!

323

ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டபகுதியில் காணிகள் பெற்றுக்கொண்டு இதுவரை வீடுகள் கட்டாத 190 சிற்றூழியர்களுக்கு 5 இலட்சம் ரூபா மானியம் வழங்கப்படவுள்ளதால் தத்தமது காணிகளை துப்பரவு செய்து எதிர்வரும் 5ம் திகதிக்கு முன் தமது பெயர்களை வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரசபையில் பதிவு செய்துகொள்ளுமாறு வவுனியா வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் வி.எம்.வி.குருஸ் அறிவித்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு காணிகள் அற்ற 700 பேருக்கு கால்ஏக்கர் காணி வழங்கப்பட்டது. அதில் 60 பேர் மட்டுமே இதுவரை வீடுகட்டி குடியேறியுள்ளனர். ஏனைய காணிகள் பற்றைக்காடாக உள்ளது. இக்காணிகளில் சிற்றூழியர்களின் காணிகள் பல இனம்காணப்பட்டுள்ளது. என வீடமைப்பு அதிகாரசபையினர் தெரிவித்துவரும் நிலையில் இவர்களுக்கு உடனடியாக வீடுஅமைக்க உதவி வழங்குமாறும் மற்றும் பல்வேறு அடிப்படைவசதிகள் கோரியும் கவனயீர்பபு போராட்டம் அரச ஊழியர் வீட்டுத்திட்டபகுதியில் நேற்று (26.03) முன்னெடுக்கப்பட்டது.

உடனடியாக அன்றைய தினம் வீடமைப்பு அதிகாரசபையினர் குறித்த இடத்திற்கு விஜயம் செய்து 190 சிற்றூழியர்கள் காணிகளை பற்றைகளாக இனம் கண்டுள்ளனர்.

எனவே இப் பற்றைக் காணிகளை எதிர்வரும் 3ம் திகதிக்கு முன்னர் (03.04.2017) துப்பரவு செய்து எதிர்வரும் 5ம் திகதிக்கு முன்னர் தமது காணிகளை அடையாளப்படுத்தி தமது பெயர் விபரங்களை வீடமைப்பு அதிகாரசபை வவுனியா காரியாலத்திற்கு சென்று தமது பதிவு செய்து மானியத்தை பெற்று உடனடியாக வீடமைப்பு பணியை முன்னெடுக்குமாறு இன்று (27.03) அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.