முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்த மாணவனை கடுமையாக தாக்கிய அதிபர்!!

205


பாடசாலை அதிபரினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் காரணமாக காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



குறித்த மாணவனினால் முகப்புத்தகத்தில பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் தொடர்பில வினவியே அதிபர் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திம்புலாகல கல்வி வலயத்திற்கு சொந்தமான அரலங்வில பாடசாலையில் 9ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.



இந்த தாக்குதல் தொடர்பில், அரலங்வில பாளம், இலக்கம் 136 என்ற விலாசத்தில் வசிக்கும் மாணவனின் தந்தை சம்பவம் தொடர்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த மாணவன் நேற்று நீதிமன்ற வைத்திய அதிகாரியின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.