இந்தியாவுடன் இணைந்து இலங்கை செய்மதி ஒன்றை விண்ணில் ஏவவுள்ளது!!

395

இந்தியாவுடன் இணைந்து இலங்கை செய்மதி ஒன்றை விண்ணில் செலுத்தவுள்ளதாகஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தகவல்வெளியிட்டுள்ளார்.

கொழும்பு – பண்டரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தென்னாசிய தொடர்பாடல் மற்றும் காலநிலை சார்ந்த செய்மதியை இந்தியா விரைவில்விண்ணில் செலுத்தவுள்ளதாகவும், அதில் இலங்கையையும் பங்குதாரராகஇணைக்கவுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்துதெரிவித்துள்ளார்.