முள்ளிவாய்கால் சிறுவர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுபோட்டி!!(படங்கள்)

485

 
முள்ளிவாய்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நேற்று(27.03.2017) திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது

44 மாணவர்களை கொண்ட இப்பாடசாலையில் விருந்தினர்களை வரவேற்றல், ஒலிம்பிக் தீபமேற்றல், மாணவருக்கான விளையாட்டுக்கள், உடற்பயிற்சிகள், வினோதவுடை நிகழ்வுகள், பெற்றோருக்கான விளையாட்டுக்கள், என பல நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது

யுத்தத்தின் பின் முள்ளிவாய்கால் கிராமத்து மக்கள் மனதில் சந்தோசத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்திருந்தது

சிறுவர்பாடசாலையின் ஆசிரியர்களின் வழிநடத்தலில் (செல்வி ஞா றொக்சி, திருமதி ஏ.வெல்சி, திருமதி த.சுயர்மதி) நடைபெற்ற இவ்விளையாட்டுபோட்டியில் ஜே ஆர் எஸ் எஸ் இன் இணைப்பாளர் திரு அசோக், மற்றும் அருட்சகோதரி ஜேயுலின் அவர்களும் பிரதம நபர்களாக கலந்து கொண்டிருந்தனர்

பெருமளவு கிராமத்து மக்கள் கலந்து கொண்ட இன்நிகழ்வில் அழைப்பு விடுத்திருந்த பல அரசியற் பிரமுகர்கள் மக்களுக்கான முக்கிய கூட்டங்களுக்குகாக சென்றிருந்தைமையால் மக்களோடும் மகவர்களோடும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.