போத்தலின் மூலம் நீர் குடித்த ராஜநாகம்!!(காணொளி)

464


 
அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சியினால், குடிப்பதற்கு நீர் தேடி வந்த ராஜநாகத்திற்கு போத்தலின் மூலம் நீர் கொடுத்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

தென்னிந்தியாவிலுள்ள கைகா எனும் பிரதேசத்திற்குள் நுழைந்த 12 அடி நீளமான ராஜநாகத்தை, குறித்த பகுதியிலுள்ள விலங்கியல் பராமரிப்பு அதிகாரிகள் பிடித்துள்ளார்கள்.



இந்நிலையில் குறித்த நாகம் நீரின்றி, அலைவதை உணர்ந்த அதிகாரிகள், ராஜநாகத்திற்கு போத்தலின் மூலம் நீர் கொடுக்கவே, பாம்பும் அதை குடிக்கும் காணொளி வெளியாகி பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் மனிதர்கள் நடமாட்டமுள்ள பகுதிகளுக்கு வராததும், 100 யானைகளை ஒரே நேரத்தில் கொள்ளகூடிய விஷமுடைய ராஜநாகம், மனிதர்கள் கொடுத்த நீரை போத்தலினுடாக பருகியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.