உறைந்த குளத்தில் சிக்கி தவித்த நாய்; உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய உரிமையாளர்!!

564

கனடாவில் பனியால் உறைந்த குளத்தின் மத்தியில் சிக்கி உயிருக்கு போராடிய நாயை, அதன் உரிமையாளர் உயிரை பணயம் வைத்து மீட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

ஆல்பர்ட்டா பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த வீடியோவில், பனியால் உறைந்த குளத்தின் மத்தியில் நாய் ஒன்று சிக்கி தவித்து உயிருக்கு போராடுகிறது.

இதைக்கண்ட அதன் உரிமையாளர் சற்றும் யோசிக்காமல் குளத்தில் குதித்து தட்டு தடுமாறி நாய்க்கு அருகில் சென்று மீட்கிறார். பின்னர், நாயை தூக்கிக்கொண்டு வரும் போது பனி உடைந்து குளத்தில் மூழ்குகிறார்.

எனினும், மீண்டும் எழுந்த அவர் பத்திரமாக நாயுடன் கரை சேருகிறார். இதுகுறித்து நாயின் உரிமையாளர் கூறியதாவது, நான் செய்தது சரி தான். இப்படி ஒரு ஆபத்தான சூழலில் நாய் சிக்கி இருப்பதை பார்க்கும் எந்த ஒரு உரிமையாளரும் இதை தான் செய்வார்கள் என கூறியுள்ளார்.

சம்பவயிடத்திலிருந்த ஒருவர் இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். நாயை மீட்டு உரிமையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.