வவுனியா கலைமகள் முன்பள்ளியின் விளையாட்டுப்போட்டி!!

527

 
வவுனியா ஓமந்தை மருதங்குளம், கலைமகள் (தந்தை செல்வா) முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி இன்று (12.05.2017​) காலை 10​ ​மணியளவில் முன்பள்ளியில் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கௌரவ விருந்தினராக முன்பள்ளி கல்விப் பணிப்பாளர் திரு.இராஜேஸ்வரன், சிறப்ப விருந்தினராக ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் திரு.திருஞான சம்பந்தமூர்த்தி கிராம வேவையாளர் செல்வி கி.தர்மினி, கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர், பெற்றோர்கள், அயல் கிராமத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு மாணவர்களின் செயற்திறன் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.