இங்கிலாந்து மண்ணில் பிரகாசிக்க முடியும் : அஞ்சலோ மத்யூஸ் நம்பிக்கை!!

351

இங்கிலாந்து மண்ணில் பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் தெரிவித்தார்.

தாம் இங்கிலாந்து சென்று 12 முதல் 14 நாட்கள் வரை பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாகவும், அதன் ஊடாக சிறப்பாக விளையாட முடியும் என நம்புவதாகவும் அஞ்சலோ மத்யூஸ் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் இன்று காலை இங்கிலாந்து நோக்கிப் பயணமாகின்றது. இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது.