100 ஆவது பிறந்தநாளை புகைப்படமெடுத்து கொண்டாடிய இரட்டைச் சகோதரிகள்!!

314

 
இரட்டை சகோதரிகள் தமது 100ஆவது பிறந்தநாளை புகைப்படமெடுத்து கொண்டாடிய சம்பவம் பிரேசிலில் பதிவாகியுள்ளது.

பிரஸிலின் கரியாஷியா பகுதியை சேர்ந்த மரியா பிக்னேடன் பான்டின் மற்றும் பவுலினா பிக்னேடன் பான்டின் ஆகிய இரட்டை சகோதரிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி தமது 100ஆவது அகவையில் காலடி வைக்கவுள்ளனர்.

இந்நிலையில் தமது 100 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கமீலா லீமா என்ற புகைப்பட கலைஞரின் உதவியுடன் பல்வேறு கோணங்களில் புகைப்படங்களை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் குறித்த இரட்டை சகோதரிகள் தமது சிறுவயது பருவ நினைவுகளை மீட்கும் வகையிலான உடைகளை அணிந்து புகைப்படத்திற்கு தோற்றமளித்துள்ளதாக புகைப்படக்கலைஞர் தனது சமூகவலைத்தளத்தினுடாக படங்களை பகிர்ந்துள்ளார்.

அத்தோடு குறித்த இரட்டை சகோதரிகள் தமது 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரும் விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.