பேஸ்புக் விதிமுறைகளில் ஓட்டை : பிரபல பத்திரிக்கை வெளியிட்ட ஆதாரம்!!

423

உலகம் முழுவதும் சுமார் 2 பில்லியன் மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமான பேஸ்புக் தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பேஸ்புக்கின் பதிவுகளை முறைப்படுத்தும் ரகசிய விதிமுறைகளை புலனாய்வு செய்துள்ள தி கார்டியன் பத்திரிக்கை, பேஸ்புக்கின் பல சர்ச்சைக்குரிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

வன்முறை, வெறுப்புப் பேச்சு, தீவிரவாதம், ஆபாச படங்கள், இனவெறி, தனக்குத்தானே தீங்கு செய்தல் போன்றவை பேஸ்புக்கால் தடை செய்யப்பட்டுள்ளது.

எனினும், விளையாட்டு , சூதாட்டம் மற்றும் நரமாமிசம் தொடர்பான பதிவுகளில் கூட எவற்றை வெளியிடலாம் வெளியிடக் கூடாது என்பதில் பல வழிகாட்டு நெறிமுறைகளை பேஸ்புக் வைத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்த விதிமுறைகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

வெறும் 10 வினாடியில் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து ஒருவர் இடும் பதிவை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதை போஸ்புக்கால் நிர்ணயிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பேஸ்புக்கில் ஒரு வாரத்தில் சுமார் 6.5 மில்லியன் பொய்யான கணக்குகள் உருவாக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே இருப்பதால், பேஸ்புக் பதிவுகளை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.