வவுனியாவில் காற்றுடன் கூடிய கடும் மழை : முறிந்த மரங்கள், அறுந்த மின்சாரக் கம்பிகள்!!

550


வவுனியாவில் இன்று(24.05) நண்பகல் தொடங்கி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.



கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துவருவதால் வவுனியாவில் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள மரங்களும் முறிந்து விழுந்துள்ளதனால் கண்டி வீதியில் போக்குவரத்தும் சிரமத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் பல இடங்களில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதனால் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மின்சார சபையினர் அறுந்த மின்சாரக் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



வவுனியாவில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான மழை பெய்து வருவதாகவும் பல வீதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.