உலக மக்களிடம் கெஞ்சிய சிறுவன்!!

274

அமெரிக்காவை சேர்ந்த 6 வயது சிறுவன், வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து சமூக வலைதளத்தில் வீடியோவொன்றை பதிவிட்டுள்ளார்.

முக்கியமாக அமெரிக்காவில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறையை ஒடுக்க மிசூரி, செயின்ட் லூயிஸ் பகுதியை சேர்ந்த Jeffrey Laney என்ற 6 வயது சிறுவனே இவ்வாறு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Jeffrey Laney பேசிய வீடியோவை அவரின் தாய் LeeLee Cheatham தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோவில் Jeffrey Laney பேசியதாவது, ஒருவருக்கொருவர் கொல்லப்படுவதை மக்கள் நிறுத்த வேண்டும், வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டும்.

ஏனென்றால் நான் சாகப்போவது மிகவும் பயமாக இருக்கிறது, என் குடும்பத்தினர் இறந்து போவதை பார்க்க எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.

துப்பாக்கிகள் உட்பட அனைத்து கெட்ட விஷயங்களும் எனக்கு தெரிகிறது. நான் ஒரு குழந்தை, இந்த வயதில் எனக்கு கெட்ட விஷயங்கள் பற்றி தெரியாமல் இருக்க வேண்டும் என கெஞ்சியுள்ளார்.

சமீபத்தில் Jeffrey Laney-யின் உறவினர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதே இதுபோன்ற ஒரு விழிப்புணர்வு வீடியோ வெளியிட தூண்டியதாக Jeffrey Laney-யின் தாய் தெரிவித்துள்ளார்.