தாய் இறந்தது தெரியாமல் பால் குடித்த குழந்தை : நெஞ்சை உருக்கும் வீடியோ!!

473


மத்திய பிரதேசத்தில் தாய் இறந்து போனது கூட தெரியாமல் மார்பில் இருந்து குழந்தை பால் குடித்துக்கொண்டிருந்த வீடியோ நெஞ்சை உருக்கியுள்ளது.



மத்திய பிரதேச மாநிலம் Damoh மாவட்டத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் பெண்மணி ஒருவர் இறந்து கிடந்துள்ளார். தனது தாய் இறந்து போன கூட தெரியாமல், அவரின் 17 மாத குழந்தை தாயின் மார்பில் பால்குடித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே பொலிஸ் கூறியதாவது, இன்று காலை ரயில் டிராக்கில் ஒரு பெண்மணி இறந்துகிடப்பதை சற்று தொலைவில் இருந்து பார்த்தோம், சற்று அருகில் நெருங்கி செல்கையில் அவருக்கு பக்கவாட்டில் அவரது குழந்தை பால்குடித்துக்கொண்டிருந்ததை பார்த்ததும் எங்கள் கண்களில் கண்ணீர் வந்தது.



அந்த பெண்ணின் மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வந்ததால், இது விபத்து என்று நினைக்கிறோம், பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை அனுப்பி வைத்துள்ளோம்.



தற்போது, குழந்தைக்கு சளி பிடித்துள்ளதால் பத்திரமாக கவனித்து வருகிறோம், விரைவில் அப்பெண்ணின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து தகவல் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தையை பாதுகாப்பாக ஒப்படைப்போம் என கூறியுள்ளார்.