பிரான்ஸ், பெல்ஜியத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவிலும் தீவிரவாதிகள் பயன்படுத்திய ஒரே ஆயுதம்!!

301

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 22பேர் பலியாகினர். 119 பேர் படுகாயமடைந்தனர்.

இதுவரை இது தொடர்பாக 8 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். இதில் தீவிரவாதியான Salman Abedi-இன் சகோதரர் மற்றும் தந்தையும் அடங்குவர்.

Salman Abedi இத்தாக்குதலுக்கு பயன்படுத்திய வெடிகுண்டு மற்றும் அது தொடர்பான புகைப்படங்களை அமெரிக்க புலனாய்வுத்துறையினர் கசியவிட்டனர். அது பிரித்தானிய அதிகாரிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மான்செஸ்டரில் தீவிரவாதிகள் பயன்படுத்திய வெடிகுண்டும் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் தீவிரவாதி பயன்படுத்திய வெடிகுண்டும் ஒன்று என அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு குழு தலைவர் Mike McCaul கூறியுள்ளார்.

இது குறித்து கூறுகையில், மான்செஸ்டரில் தீவிரவாதி பயன்படுத்திய குண்டு TATP-வகையைச் சேர்ந்தது. இந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை எவ்வாறு தயாரிக்கலாம் என்ற வீடியோ யூடியுப்பில் உள்ளது.

இதே வகை குண்டு தான் கடந்த 2015ம் ஆண்டு பிரான்சின் பாரிசில் நடந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர், அத்தாக்குதலில் 89 பேர் பலியாகினர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெல்ஜியத்தின், புருசெல் விமானநிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதே வகை குண்டைத்தான் தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.

பெல்ஜியம் தாக்குதலில் 32-பேர் பலியாகினர். மேலும் இந்த வகை வெடிகுண்டுகளில் அதிக அளவு கெமிக்கல் மற்றும் அசிடோன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி இதை ஒரு சாதரண மனிதன் செய்ய முடியாது, தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மான்செஸ்டரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியான Salman Abedi-யின் வீட்டை சோதனை செய்த போது, அங்கு ஒரு வெடிகுண்டு தொழிற்சாலையே இருப்பது போல் இருந்துள்ளது.

அந்த அளவிற்கு உபகரணங்கள் இருந்துள்ளன. அதிக அளவிலான கெமிக்கல்களும் வீட்டில் இருந்துள்ளன.

அதுமட்டுமின்றி Salman Abedi சிரியா சென்று தீவிரவாதிகளை சந்தித்துள்ளான் என்பதையும் பொலிசார் உறுதிசெய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் ஜெர்மனி சென்ற அவன் அதன் பின் துருக்கி வழியாக சிரியா சென்றுள்ளான் என்று தெரிவித்துள்ளனர்.