வீதி விபத்தில் நடிகை பலி!!

430

வீதியில் நின்று கொண்டிருந்த லொறி மீது கார் மோதிய விபத்தில் துணை நடிகை மற்றும் கார் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அனுஷா சிங் (20). பெங்களூரு அருகே உள்ள கெங்கேரி எம்.ஏ.புரா பகுதியை சேர்ந்தவர் பவானி (20) துணை நடிகைகளான இருவரும் துபாயில் நடந்த தமிழ் திரைப்பட படப்பிடிப்பில் நடித்து விட்டு, நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து வாடகை காரில் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தனர். காரை ஹரிகிருஷ்ணன் (29) என்பவர் ஓட்டி சென்றார்.

நேற்று அதிகாலை ஓசூர் மேம்பாலத்தில் கார் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் மீது கார் மோதியது.

இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக உடைந்தது. இந்த கோர விபத்தில் அனுஷா சிங் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பவானி படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அங்கிருந்த மக்கள் பவானியை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

கார் ஓட்டுனர் அதிவேகமாக காரை ஓட்டியதால் விபத்து நடந்திருக்கலாம் என கூறிய பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.