நடத்தையில் சந்தேகம் : மனைவி மற்றும் குழந்தையை கொடூர முறையில் கொன்ற கணவன்!!

277

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரையும், குழந்தையையும் கொடூரமாக கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது பஷிர் (44). இவருடைய மனைவி சகிதா (37) இவர்களுக்கு கதிஜாதுல் மிஸ்திரி (1) என்னும் மகள் உள்ளார்.

முகமது பஷிருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணவன் மற்றும் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று பஷிருக்கும், சகிதாவுக்கு சண்டை உச்சத்தை அடைந்துள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த பஷிர் தனது மனைவியின் கை, கால்களை கட்டி போட்டார். பின்னர் வீட்டில் இருந்த சலவை பெட்டியை வைத்து அவர் உடல் முழுவதும் சூடு வைத்து அவரை துடிதுடிக்க கொலை செய்துள்ளார்.

இந்த நேரத்தில் வீட்டில் இருந்த பஷிரின் குழந்தை அழுதுள்ளது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர் படுக்கையில் இருந்த தலையணையை குழந்தையின் முகத்தில் அழுத்தினார்.

குழந்தைக்கு மூச்சு திணற, பின்னர் குழந்தையை எடுத்து சுவரில் வீசி கொடூரமாக பஷிர் கொலை செய்தார்.

பின்னர், கதிஜாதுல் சடலத்தை ஒரு பெட்டியில் அடைத்து வைத்து அதை காரில் ஏற்றி கொண்டு கோழிக்கோடு அரையடத்து பாலம் பகுதிக்கு சென்ற பஷிர், பின்னர் அங்கு காரை நிறுத்தி குழந்தையை அந்த இடத்தில் புதைத்துள்ளார்.

பின்னர், தன் மனைவி சடலத்தை எடுக்க பஷிர் வீட்டின் அருகில் வந்த போது அங்கு பொலிசார் இருப்பதை கண்டு தலைமறைவானார்.

அதன் பின்னர், பஷிரை பிடிக்க பொலிசார் தனிப்படை அமைத்து தேட கல்லடிக்கோடு என்ற இடத்தில் பதுங்கி இருந்த அவரை பொலிசார் கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், அதன் பிறகு சிறையில் அடைக்கபட்டார்.