வவுனியா முருகனூர் சித்தி விநாயகர் ஆலயம் வசந்த மண்டபத்திற்கான அடிகள் நாட்டுதல் நிகழ்வு நேற்று (26.05.2016) நண்பகல் 12 மணியளவில் ஸ்ரீ சிதம்பர லக்ஷ்மி திவாகரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சந்திரகுலசிங்கம் மோகன் (உபநகர பிதா), சிதம்பரபுரம் பொலிஸ் அதிகாரி, வவுனியா மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் , அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.