சாதகமான தீர்வு கிடைக்காவிடின் எங்களது போராட்ட வடிவம் மாறும் : வவுனியா சுகாதாரத் தொண்டர்கள்!!

277

 
சாதகமான தீர்வு கிடைக்காத நிலையில் எங்களது போராட்டத்தை வேறு வடிவத்திற்கு மாற்ற வேண்டி வரும் என வவுனியாவில் நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார தொண்டர்கள் இருபத்து நான்காவது நாளாகவும் நிரந்தர நியமனம் கோரி வவுனியா பிராந்திய சுகாதார நிலையம் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 31ம் திகதி வடமாகாண ஆளுநரை சந்திப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. 31ம் திகதி ஆளுநரிடம் இருந்து எங்களிற்கு சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகின்றோம். அங்கும் எங்களுக்கொரு சாதகமான தீர்வு கிடைக்கப்பெறாதபட்சத்தில் எங்களது போராட்டத்தை வேறு விதமாக செய்வதற்கு தீர்மானித்துள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பதினைந்து வருட காலமாக சுகாதார தொண்டர்களாக பணியாற்றியவர்களே தற்போது தமக்கான நிரந்தர நியமனம் கோரி வவுனியா சுகாதார பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.