நாட்டில் காற்றின் வேகம் அதிகரிப்பு அவதானத்துடன் இருக்க கோரிக்கை!!

595


நாட்டில் நிலவும் கன­மழை மற்றும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக இலங்­கையின் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ­மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் கட­லோர பகு­தி­களில் மக்கள் மிகவும் அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறும் வானிலை அவ­தான நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.



கடந்த மூன்று நாட்­க­ளாக நாட்டில் கன­மழை பெய்­து­வரும் நிலையில் நாட்டின் 14 மாவட்­டங்கள் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக களுத்­துறை, இரத்­தி­ன­புரி மாவட்­டங்கள் முழு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்ள அதே வேளையில் கேகாலை, காலி பகு­தி­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் நாட்டின் இந்த மோச­மான கால­நிலை இந்த மாதம் இறுதி வரையில் நீடிக்கும் நிலையில் நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளுக்கு தொடர்ந்தும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இந்­நி­லையில் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் காற்றின் வேகம் அதி­க­ரிக்க வாய்ப்­புகள் உள்­ள­தாக வானிலை அவ­தான மத்­திய நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. குறிப்­பாக கடற் பகு­தி­களில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதி­க­ரிக்­கலாம் எனவும் கட­லோரப் பகு­தி­களில் வாழும் மக்கள் மிக மிக அவ­தா­ன­மாக இருக்­கு­மாறும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.



மேலும் காங்­கே­சன்­துறை, திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு பகு­தி­களில் குறிப்­பாக கடற்­ப­கு­தியில் காற்­றின்­வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதி­க­ரிக்­கலாம். அதேபோல் தரையில் சுமார் 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் இருக்­கலாம். எனவே மீன­வர்கள் கட­லுக்கு செல்­வதில் மிக மிக அவ­தா­ன­மாக இருக்­க­வேண்டும் எனவும் எச்­ச­ரித்­துள்­ளது.



அதேபோல் கொழும்பு, களுத்­துறை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கும் அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. களனி கங்கை மற்றும் நில்­வலா கங்­கையின் நீர்­மட்டம் வேக­மாக அதிகரித்து வரும் நிலையில் கரையோர பகுதிகளில் உள்ள மக்களையும் உடனடியாக வெளியேற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது