தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக நிலை கொண்டிருந்த கடுமையான மழை யுடன்கூடிய காலநிலை தற்காலி கமாக குறைவடைந்துள்ளது.
எனினும் நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களில் நாளை முதல் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை பதிவாகவுள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
ஆகவே மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அப்வப்போது மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யவுள்ளதாகவும் . சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது .
மேலும் ஏனைய மாகாணங்களில் குறிப்பாக ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும்.மேலும் அவ்வப்பபோது இலங்கையை ஊடறுத்து மணித்திலாயத்திற்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதேவேளை மழைபெய்யும் வேளையில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
ஆகவே சீரற்ற காலநிலையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் மக்கள் அவதானமாக நடந்துகொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுள்ளது.