நாளை முதல் மீண்டும் மழை?

255

தென்­மேற்கு பரு­வப்­பெ­யர்ச்சி காலநிலை கார­ண­மாக நிலை ­கொண்­டி­ருந்த கடு­மை­யான மழை­ யு­டன்­கூ­டிய கால­நிலை தற்­கா­லி ­க­மாக குறை­வ­டைந்­துள்­ளது.

எனினும் நாட்டின் தென்­மேற்கு பிர­தே­சங்­களில் நாளை முதல் மீண்டும் மழை­யுடன் கூடிய கால­நிலை பதி­வா­க­வுள்­ள­தாக வானிலை அவ­தான நிலையம் எதிர்­வு­கூ­றி­யுள்­ளது.

ஆகவே மேல், சப்­ர­க­முவ, தென், மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் அப்­வப்­போது மழை அல்­லது இடி­யு­டன்­கூ­டிய மழை பெய்­ய­வுள்­ள­தா­கவும் . சில பிர­தே­சங்­களில் 100 மில்­லி­மீற்றர் வரை­யி­லான மழை­வீழ்ச்சி பதி­வா­கலாம் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது .

மேலும் ஏனைய மாகா­ணங்­களில் குறிப்­பாக ஊவா மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் மாலை வேளையில் ஆங்­காங்கே மழை அல்­லது இடி­யு­டன்­கூ­டிய மழை பெய்யும்.மேலும் அவ்­வப்­ப­போது இலங்­கையை ஊட­றுத்து மணித்­தி­லா­யத்­திற்கு 50 – 60 கிலோ­மீற்றர் வேகத்தில் காற்று வீசக்­கூடும். இதே­வேளை மழை­பெய்யும் வேளையில் காற்றின் வேகம் மேலும் அதி­க­ரிக்கும் அபாயம் உள்­ளது.

ஆகவே சீரற்ற கால­நி­லையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் மக்கள் அவதானமாக நடந்துகொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுள்ளது.