வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இன்று (28.05.2017) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற கைத்தொழிலாளர்களுக்கான செயலமர்வு ஒன்றிற்கு வருகை தந்த அமைச்சர் ரிசாட் பதியுதீனை சுகாதாரத் தொண்டர்கள் மறித்து தமது நிரந்தர நியமனம் தொடர்பாக கலந்துரையாடினர்.
அவர்களின் வேண்டுகோளிற்கு கருத்து தெரிவித்த அமைச்சர், உங்களுடைய சுகாதார அமைச்சரிடம்தான் உங்களுக்கு நியமனம் பெற்றுக்கொடுக்க வேண்டிய அதிகாரம் உள்ளது அவருடன் கலந்துரையாடி பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தார்.
வவுனியாவில் கடந்த 25 நாட்களாக சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு கோரி தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.