வவுனியா தாண்டிக்குளத்தில் இளைஞன் மீது 15 பேரடங்கிய குழுவினர் தாக்குதல்!!

271

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (28.05.2017) பிற்பகல் வீட்டிற்குள் புகுந்த 15 பேரடங்கிய குழுவினர் அங்கிருந்த இளைஞன் மீது சரமாரியாகத்தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

இன்று நண்பகல் 12 மணியளவில் தாண்டிக்குளம் முதலாம் ஒழுங்கையில் மோட்டார் சைக்கிலில் தாயாருடன் சென்ற சிவதீஸ்வரன் கஜராஜ் என்ற 21 வயதுடைய இளைஞனை 15ற்கும் மேற்பட்ட குழாய்க்கிணறு தோண்டும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மதுபோதையில் வீட்டிற்குள் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதை தடுக்கச் சென்ற தாயார் மீதும் குறித்த குழுவினர் தாக்கியுள்ளனர். இளைஞனைத் தாக்கிவிட்டு இளைஞனின் மோட்டார் சைக்கிலையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து படுகாயமடைந்த இளைஞனை வைத்தியசாலையின் அனுமதித்துவிட்டு வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இரவு 7 மணிவரையும் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிசார் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.