8 பேரின் உயிரை காப்பாற்றி விட்டு உயிரிழந்த இளைஞன்!!

463

நாட்டில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றம் காரணமாக பலர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் அடித்துச் செல்லப்பட்ட கடும் வெள்ளத்தில் போராடி, எட்டு உயிர்களை காப்பாற்றிய இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பெலியத்த தம்முல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 8 பேரின் உயிரை இளைஞர் தனி நபராக காப்பாற்றியுள்ளார். கட்டுக்கடங்காத வெள்ளம் காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

எட்டுப் பேரின் உயிரை காப்பாற்றிய போதும், அதே வெள்ளத்தில் அவர் உயிர் பிரிந்தமை அந்த பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழப்பதற்கு முன்னர் 8 உயிர்களை காப்பாற்றிய அவரே உண்மையான வீரர் என பலரால் பாராட்டப்பட்டு வருகிறார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 151 பேர் உயிரிழந்ததுடன் 112 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.