வவுனியா வைரவப்புளியங்குளத்தில் முச்சக்கரவண்டி தடம்புரண்டு விபத்து : நால்வர் படுகாயம்!!

465


 
வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டு வீதியில் இன்று (03.06.2017) மதியம் 1 மணியளலில் முச்சக்கரவண்டி தடம்புரண்டதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

லக்சபானா வீதியிலிருந்து வவுனியா புகையிரத நிலையம் நோக்கி நால்வரை ஏற்றி வந்த முச்சக்கரவண்டி வைரவப்புளியங்குளம் குளக்கட்டு வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.



இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக முச்சக்கரவண்டியின் சாரதியிடம் வினாவிய போது, லக்சபான வீதியிலிருந்து புகையிரத நிலையம் நோக்கி பயணித்தேன். கடும் காற்று வீசியதால் முச்சக்கரவண்டி எனது கட்டுப்பாட்டை இழந்து குளக்கட்டில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது எனத் தெரிவித்தார்.



இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.