வவுனியா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி!!

339

 
வவுனியா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி இம்மாதம் 30.06.2017 அன்று வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதற்கான ஆரம்ப கூட்டம் இன்று (06.06.2017) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விளையாட்டு உத்தியோகத்தர்கள் , சமூகசேவை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், உயிரிழை, டேடா அமைப்பு என்பன கலந்து கொண்டன.

மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் தேவராசா அமலன் விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதற்கு வேண்டிய முழுமையான ஆதரவை தாம் வழங்குவதாகவும், வவுனியா மாவட்ட மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டுத்திறனை முன்னெடுப்பதற்கு ஒரு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு அபிவிருத்தி குழுவைத் தெரிவு செய்யவேண்டும் எனவும் கேட்டிருந்தார். இந்த முறை முன்னேற்பாடாக திட்டமிட்டு இந்தப்போட்டியை நடாத்த இருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, எனவும் குறிப்பிட்டார்.